யாழ் மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கௌரவ ஆளுநர் அவர்களினால் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் 01.03.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களால் பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மக்கள் பணியில் சிறப்பாக சேவையாற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளமுடாக தகவல் தொழில்நுட்ப உலகத்திற்குள் பிரவேசித்து மக்கள் பணிகளை மேற்கொள்ள முன்னெடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்க விடயமாகும் எனக் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் தற்போதைய இளம் சமுதாயத்தினர் அனைத்து விடயங்களையும் தொழில்நுட்பரீதியாக கையாள்வதால் எமது சேவைகளையும் அவர்களுக்கு ஏற்றவகையில் மிக வேகமாக இவ்வாறான இணையத்தளங்களினூடாக வழங்கமுடியும் என தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளையும், வரி உள்ளிட்ட கட்டணங்களையும் இணையத்தளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையம் மேம்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், இறைவரித்திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் பிரதிநிதி, சபையின் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்ததோடு இணையத்தளத்தை வடிவமைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதம செயலாளர் அவர்களால் பராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *