உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு YMCA இன் பங்கேற்புடன் இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பழைய பூங்கா வளாகத்தில் 2025.06.02 ஆம் திகதி இந்தியத் துணைத்தூதரக ஸ்தானிகர் திரு எஸ்.ஸ்ரீ சாய் முரளி மற்றும் மாநகர ஆணையாளர் திரு.ச.கிருஷ்ணேந்திரன் ஆகியோரால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வின்போது பழைய பூங்கா வீதியும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.