உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபையினால் உள்ளூராட்சி சபைகளுக்கிடையே நடாத்தப்பட்ட தாழிழுவைப் போட்டியில்(கயிறு இழுத்தல்) யாழ்ப்பாணம் மாநகர சபை பெண்கள் அணி முதலாம் இடத்தினையும் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இதற்கான வெற்றிக்கேடயங்கள் மாநகர ஆணையாளர் திரு.ச.கிருஷ்ணேந்திரன் அவர்களிடம் கை
யளிக்கப்பட்டது.