செய்திகள்

வாணி விழா 2022

யாழ்.மாநகர சபையின் கலை கலாசார நிலையியல் குழுவினாரால் ஏற்பாடு செய்யப்பட்ட நவராத்திரி விழா 2022.10.03 ஆம் திகதி மாநகர சபையில் இடம்பெற்றது. கலை கலாசார நிலையியல் குழுவின் தலைவரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான கௌரவ செல்வவடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்.மாநகர முதல்வர் கௌரவ.வி.மணிவண்ணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பிரதி முதல்வர் கௌரவ.து.ஈசன், மாநகர ஆணையாளர் திரு.இ.த. ஜெயசீலன் அவர்களும் மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபையின் திணைக்களத் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். நவராத்திரி பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகளாக யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியின் வரவேற்பு நடனமும் காசிப்பிள்ளை வித்தியாசாலை மாணவர்களின் நடனம் மற்றும் பாடல்களும் இடம் பெற்றன. அத்துடன் சமுதாய முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆண்களா பெண்களா என்ற பட்டிமன்றமும் நடைபெற்றது. நவாராத்திரியின் சிறப்பம்சமான விஜயதசமியினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் பிள்ளைக்கனியமுதம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் யாழ்.மாநகர சபையால் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *