யாழ்ப்பாண மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது சபையின் அங்கீகாரத்திற்காக 2021.12.15 ஆம் திகதியாகிய இன்றைய தினம் சபையில் கௌரவ முதல்வர் திரு.வி.மணிவண்ணன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பது தொடர்பாக பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கௌரவ உறுப்பினர் திரு.ப.தர்சானந் அவர்கள் முன்மொழிய கௌரவ உறுப்பினர் திருமதி.வி.மதிவதனி அவர்கள் வழிமொழிய சபையால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் கௌரவ முதல்வர் அவர்கள் செயலாளர் அவர்களிடம் வரவு செலவுத்திட்ட அங்கீகாரத்திற்கான பகிரங்க வாக்கெடுப்பினை நடாத்துமாறு பணித்திருந்தார். செயலாளர் அவர்கள் சபை உறுப்பினர்களது பெயரினை வாசித்து வாக்கெடுப்பினை மேற்கொண்டார். அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை ஏற்றுக் கொள்வதாக 24 உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வில்லையென 21 உறுப்பினர்களும் தமது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இதற்கமைவாக யாழ் மாநகரசபை 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் 03 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
