யாழ் மாநகரசபையின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாநகர முதல்வர் திரு.வி.மணிவண்ணன் அவர்களின் முயற்சியின் மற்றுமொரு செயற்பாடாக நாயன்மார்கட்டுக்குளம் புனரமைக்கப்படவுள்ளது. இவ் அபிவிருத்தி திட்டம் ஆழனந நுபெiநெநசiபெ நிறுவனத்தின் நிறுவுனர் திரு.அருந்தவநாதன் அனோசன் அவர்களின் நிதி அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த குளத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல் நிகழ்வானது 2021.12.09 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ மாநகர முதல்வர், ஆணையாளர், செயலாளர், பொறியியலாளர், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த துரித செயற்திட்டத்திற்கான திட்ட வரைபினை ஊயnழிரள நிறுவனத்தின் உரிமையாளர் துளசிவர்மன் அழகுற வடிவமைத்திருந்தார். குறித்த திட்ட வரைபிற்கான நிஜ வடிவமானது ஆழனந நுபெiநெநசiபெ நிறுவனத்தினரால் புனரமைத்து கையளிக்கப்படவுள்ளது.
நாயன்மார் கட்டுக்குள புனரமைப்பின் துரித அபிவிருத்தி திட்டம்

15
Dec